திருவண்ணாமலை அருகே விவசாயி ஒருவர் குடும்ப தகராறு காரணமாக மனைவி, குழந்தைகளை கொடுரமாக வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
திருவண்ணாமலை அடுத்த ஒரந்தவாடி கிராமத்தில் வசித்து வருபவர் பழனி, விவசாயியான இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். மேலும் இந்த தம்பதி த்ரிஷா (15), மோனிஷா (14), சிவசக்தி (6), பூமிகா (9) ஆகிய 4 மகள்களும், தனுஷ் என்ற 4 வயது மகன் ஆகியோருடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் விவசாயி பழனி குடும்பத் தகராறு காரணமாக கோடாரியால் மனைவி மற்றும் 5 குழந்தைகளையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பூமிகா என்ற 9 வயது சிறுமியைத் தவிர படுகாயம் அடைந்த அனைவரும் ரத்த வெள்ளத்தில் மரணித்துள்ளனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடி வந்த பூமிகா திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் கொலை செய்த விவசாயி பழனி, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…