Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கல்லூரி மாணவன் கொலை வழக்கு; 2 நண்பர்களுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு! 

kanimozhi Updated:
கல்லூரி மாணவன் கொலை வழக்கு; 2 நண்பர்களுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு! Representative Image.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்  கொலையில், உடன் படித்த மாணவர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர்  கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. 

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் ராகவ் (வயது 23), கிருஷ்ணகிரி 
மாவட்டம் ஓசூரில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.இ. ஆர்க்கிடெக் இறுதி ஆண்டு படித்து  வந்துள்ளார். இவர் ஓசூரில் பாலாஜி தியேட்டர் அருகில் காமராஜ் காலனி  பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் 2013ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி, மாணவர் ராகவ் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். 

இந்த கொலை சம்பவம் ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்கொலை தொடர்பாக ஓசூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மாணவரை அதே கல்லூரியில் படித்த ஈரோட்டைச் சேர்ந்த பிரவீன்குமார் (21), மேட்டுப்பாளையம் சிருமுகை பகுதியைச் 
சேர்ந்த பிரணவ் சச்சின் (20) ஆகிய 2 பேரும் சேர்ந்து கொலை செய்ததோடு, வீட்டில் இருந்து 2 மடிக்கணினிகள் மற்றும் செல்போனை எடுத்து சென்றது தெரிய வந்தது.
 

உடனடியாக இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது ராகவ் கடந்த 3 ஆண்டுகளாக வாடகைக்கு தங்கியிருக்கும் அறைக்கு நண்பர்கள் அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி வந்து செல்லும் நண்பர்களில் ஒருவர் தான் பிரவீன் குமார். இவருக்கும் அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கும் நெருங்கிய பழக்கம் இருந்து வந்துள்ளது. ஆனால் நாளாடைவில் ராகவ் உடன் நட்பு பாராட்டிய அந்த மாணவி பிரவீன்குமாரிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.


இதனால் ஆத்திரத்தில் பிரவீன்குமார், தனது நண்பர் பிரணவ் சச்சின் 
உதவியுடன் ராகவ் அறைக்கு சென்று அவருடன் நைசாக பேசி, நள்ளிரவு நேரத்தில் கழுத்தை அறுத்துக் கொலை செய்தோடு, அறையில் இருந்த பொருட்களையும் திருடிச்சென்றுள்ளார்.  

இந்த வழக்கு ஓசூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரோஸ்லின் துரை இன்று தீர்ப்பு கூறினார். 
குற்றம் சாட்டப்பட்ட பிரவீன்குமார், பிரவண் சச்சின் ஆகிய 2 பேருக்கும்
தலா ஆயுள் தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு
 அளித்தார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்