Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

லாரியுடன் நேருக்குநேர் மோதல்...தந்தை மகன் பலி...!

madhankumar June 17, 2022 & 17:41 [IST]
லாரியுடன் நேருக்குநேர் மோதல்...தந்தை மகன் பலி...!Representative Image.

சேலம் மாவட்டம் கடம்பூர் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் (30) இவர் தனது 4 வயது மகன் அப்துல் பாஷித் உடன் கிருஷ்ணாபுரத்தில் இருந்து கடம்பூர் நோக்கி தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தார். 

அப்போது கடப்பூரில் இருந்து கிருஷ்ணாபுரம் நோக்கி ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி பொங்காளி அம்மன் கோவில் அருகே லாரி வந்தபோது, பைக் மீது நேருக்கு நேர் மோதியது.இதில் சிறுவன் அப்துல் பாசித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். படுகாயமடைந்த சிறுவனின் தந்தை சதாம் உசேன், சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கெங்கவல்லி போலீசார், தந்தை, மகன் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநர் முருகனைத் தேடி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்