கர்நாடகா மாநிலம் உடுப்பு மாவட்டம் ஹவாஞ்சே என்ற பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்னா லூயிஸ். 23 வயதான இந்த இளம்பெண் தனது உறவினர் வீட்டிற்கு திருமண விழாவில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். இந்தநிலையில், அங்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நடனம் ஆடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென மயங்கி கீழே விழு, இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே ஜோஸ்னாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், இவர் மாரடைப்பு வந்து இறந்திருக்கிறார் என்றும் மருத்துவர்கள் கூறினர். சமீப காலமாக இதுபோன்ற இளம் வயதிலேயே மாரடைப்பு வந்து இறக்கும் சம்பவங்கள் இளைஞர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Most Read: லவ் டுடே இயக்குநரை இடுப்பில் தூக்கிய ரசிகர்.... வைரல் வீடியோ!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…