சந்திர கிரகணம் இன்று நிகழும் எனக் கூறப்பட்ட வேலையில், வேப்ப மரத்தில் பால் வந்தது மக்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.
நவம்பர் 8 ஆம் நாளான இன்று சந்திர கிரகணம் நிகழவிருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், கோவில்கள் நடை மூடப்பட்டு, கிரகணம் முடிந்த பின்பே திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மயிலாடுதுறை சோழப்பேட்டை கிராமத்தில் மிக நீளமான வேப்பமரத்தில் இருந்து பால் வடிந்து வந்த காட்சி அந்தப் பகுதி மக்களிடையே பெரும் வியப்பில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து, வேப்ப மரத்தை கடவுளாக நினைத்த பொதுமக்கள், மஞ்சள், குங்குமம் பூசி வேப்ப மரத்தை வழிபாடு செய்தார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Most Read: - சந்திர கிரகணத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்….!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…