திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மகா தீப திருவிழாவைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை தருவார்கள். அதன்படி, இந்த வருட கார்த்திகை தீப திருவிழாவுக்கான கொடியேற்ற விழா வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தநிலையில், திருவண்ணாமலை நகரில் காமராஜர் சிலை அருகே இயங்கிவரும் டாஸ்மாக் கடை, வேங்கிக்கால் ஏரிக்கரை, புறவழிசாலையில் உள்ள கடை, நல்லவன்பாளையம் ஹோட்டல்கள், வேங்கிக்கால் பகுதியில் இயங்கி வரும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி மதுக்கடைகள் ஆகிய அனைத்திற்கும் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் டிசம்பர் 7 ஆம் தேதி வரை மொத்தம் 6 நாட்கள் தொடர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…