உன்ன மாரி ஆட்கள் எல்லாம் அரசியலுக்கு வந்தா இந்த ஊரு எவ்வளவு நல்லா இருக்கும். விரைவில் நம்ம ஆட்சி வரும் பார்" என மதுரை மாநகரம் முழுவதும் நடிகர் சூர்யா ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அகரம் அறக்கட்டளை மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு நடிகர் சூர்யா கல்வி வழங்கி வருகிறார். இதன்மலம் சாதனை படைத்த மாணவர்களை ஆண்டுதோறும் சந்தித்து விருதுகளையும் அவர் வழங்குகிறார். அந்தவகையில் நான்கு நாட்களுக்கு முன்பு சென்னை சாலிகிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுக்கு நடிகர் சூர்யா ஊக்கமளித்தார். அப்போது, கல்வி மூலமாக வாழ்க்கையையும், வாழ்க்கை மூலமாக கல்வியையும் படியுங்கள் என மாணவர்களுக்கு அவர் அறிவுறை வழங்கினார்.
இந்நிலையில், மதுரை வடக்கு தொகுதி சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தைச் சார்ந்த ரசிகர்கள் மதுரை மாநகர் முழுவதிலும் போஸ்டர் ஒன்றை அடித்துள்ளனர். அதில் " உன்ன மாரி ஆட்கள் எல்லாம் அரசியலுக்கு வந்தா இந்த ஊரு எவ்வளவு நல்லா இருக்கும் விரைவில் நம்ம ஆட்சி வரும்பார்" என தெரிவித்து ஒரு பக்கத்தில் தமிழ்நாடு சட்டமன்றம் முன்பாக நடிகர் சூர்யா பேசுவது போன்ற காட்சி அமைத்து போஸ்டர் அடித்து உள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…