திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வீரபுரம் பகுதியில் வசித்துவரும் சிற்றரசு மகன் முத்தரசன் (23) அதே திருத்துறைப்பூண்டி நகர் மங்கல நாயகி புரத்தில் வசித்து வரும் அரவிந்தியாவுடன் கடந்த 5 நாள்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து புதுமண தம்பதியிரை ஜூன் 15ம் தேதி முத்தரசனின் மாமனார் விருந்து சாப்பிட அழைத்தார்.
இந்த விருந்திற்காக முத்தரசன் தனது மனைவியுடன் அங்கு சென்றுள்ளார், பின்னர் விருந்து முடிந்து இரவு அங்கேயே தங்கியிருந்துள்ளார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது முத்தரசன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வந்து உடலை கைப்பற்றினர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முத்தரசன் அவரது மாமனார் ரவிச்சந்திரனை பலர் முன்னிலையில் எதிர்த்துப் பேசியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் மருமகன் முத்தரசனை வெட்டி கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து மாமனார் ரவிச்சந்திரனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…