Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பள்ளி வேனுக்குள் சிக்கி.. மூச்சுத் திணறி உயிரிழந்த சிறுமி!!

Sekar September 15, 2022 & 17:31 [IST]
பள்ளி வேனுக்குள் சிக்கி.. மூச்சுத் திணறி உயிரிழந்த சிறுமி!!Representative Image.

கத்தாரில் பள்ளி வேனில் அடைபட்டு மூச்சுத் திணறி உயிரிழந்த கேரள சிறுமியின் உடல் கேரளா கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பன்னிமத்ரம் கிராமத்தில் வசிப்பவர்களின் கண்களில் மின்சா மரியம் ஜேக்கப்பின் சிறிய சவப்பெட்டி கண்ணீரை வரவழைத்தது. அபிலாஷ் சாக்கோ மற்றும் சௌமியா தம்பதியின் இரண்டாவது மகள் மின்சா. அவர் கடந்த செப்டம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளிக்குச் சென்றார். 

ஆனால் பள்ளி பேருந்திற்குள் தூங்கியுள்ளார். இதை யாரும் கவனிக்காமல் வாகனத்தின் கதவுகள் அனைத்த்ஹு மூடப்பட்ட நிலையில், மூச்சுத் திணறி இறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், உயிரிழந்த சிறுமியின் உடல் அவரது சொந்த இடத்திற்கு கொண்டு வந்து நேற்று அடக்கம் செய்யப்பட்டது. 

இந்நிலையில், சிறுமியின் மரணத்திற்கு கத்தார் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்ததுடன், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. மேலும் ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாக நடந்த இந்த செயலால், சம்பந்தப்பட்ட பள்ளியை மூட உத்தரவிட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்