கன்னியாகுமரியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வருடம் முழுவதும் இலவச ஆட்டோ சேவை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் 49 வது பிறந்த தினத்தை தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினர் உற்சாகமாகக் கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி பேரூர் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் மாவட்ட இளைஞரணி சார்பில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஏழை எளிய கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஆட்டோ சேவை துவங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வாவதுறை பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் சிவா தலைமை வகித்தார்.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஒவ்வொரு பேரூராட்சிக்கு மூன்று ஆட்டோக்கள் மற்றும் ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு ஆட்டோ என மொத்தம் 40 ஆட்டோக்கள், கர்ப்பிணிகளுக்கு இலவச சேவை வழங்கும் திட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு முழுவதும் ஏழை எளிய கர்ப்பிணி பெண்கள் தங்களின் மருத்துவ சேவைக்காக இந்த இலவச ஆட்டோ சேவையை பயன்படுத்தி கொள்ளும் வகையில், கிராமப்புற செவிலியர்களின் உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரேம், மாவட்ட பொருளாளர் சலீம், கன்னியாகுமரி நகர தலைவர் ஜோ விஜய், செயலாளர் ஹெல்மன், துணைச் செயலாளர் முகமது ஷான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…