Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோவையில் கஞ்சா சாக்லெட்... தொழிலாளி கைது..

Muthu Kumar July 31, 2022 & 17:50 [IST]
கோவையில் கஞ்சா சாக்லெட்... தொழிலாளி கைது..Representative Image.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. இதனை தடுக்க மாநகர கமிஷனர் உத்தரவின் அடிப்படையில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை கண்ணப்ப நகரில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து, சங்கனூர் ரோடு கண்ணப்ப நகர் பகுதியில் போலீசார் சோதனையின்போது வந்த முதியவர் ஒருவர் மொபட்டை நிறுத்தி விட்டு அதன் அருகே நின்றிருந்தார். மேலும் அந்த மொபட்டில் ஒரு சாக்குமூட்டையும் இருந்தது.

இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரிடம் சோதனை நடத்தியதில் 20.5 கிலோ சாக்லெட்டுகள் கைப்ற்றியுள்ளனர். மேலும் பாலாஜி என்ற அந்த முதியவரை கைது செய்துள்ளனர்.

மேலும், கஞ்சா சாக்லெட் வைத்திருந்தது தொடர்பாக 15 பேர் கொண்ட கும்பலை ரத்னபூரி போலீசார் தீவிரமாக தேடி வருகினறனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்