Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு.. கொடூரத்தின் உச்சம்!! உ.பி. அவலம்!!

Sekar September 22, 2022 & 18:28 [IST]
சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு.. கொடூரத்தின் உச்சம்!! உ.பி. அவலம்!!Representative Image.

உத்தரபிரதேசத்தில் 15 வயது சிறுமி, ஒரு முட்புதருக்குள் ஐந்து பேரால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதோடு, அந்த சிறுமியின் ஆடையை பாலியல் கொடூரத்தில் ஈடுபட்டவர்கள் எடுத்துச் சென்றதால், மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு பரபரப்பான சாலையில் 2 கிலோமீட்டர் தூரம் சிறுமி நிர்வாணமாக நடந்து வீட்டை அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் செப்டம்பர் 1ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் செப்டம்பர் 7 அன்றுதான் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது; மேலும் முதல் குற்றவாளியை கைது செய்ய போலீசாருக்கு 13 நாட்கள் ஆனது.

முதலில் பெற்றோர்கள் சிறுமி தனக்கு நேர்ந்த அவலத்தை கூறியும் நம்பவில்லை எனக் கூறப்படுகிறது. எனினும் சிறுமியின் மாமா தான் போலீசை அணுகி புகார் பதிவு செய்தார்.

அதிர்ச்சியளிக்கும் வகையில், சிறுமி நிர்வாணமாக வீட்டிற்கு நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளிச்சத்திற்கு வந்த பின்னரே முதல் கைது நடவடிக்கை அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சியார் சிலர் சிறுமியின் மீது கற்களை வீசுவதை காண முடிகிறது.

செப்டம்பர் 1 ஆம் தேதி இரவு 15 வயது சிறுமி அருகில் நடந்த ஒரு கண்காட்சியைப் பார்க்கச் சென்றிறு திரும்பியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இரவு 8 மணியளவில் சிறுமி திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​இரண்டு பைக்குகளில் வந்த ஐந்து இளைஞர்கள், மொராதாபாத்தில் உள்ள போஜ்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சைத்பூர் காதரில் உள்ள காட்டுப் பகுதிக்கு சிறுமியை கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமா தாக்கல் செய்த எஃப்ஐஆர் படி, சிறுமியை ஐந்து பேரும் மாறி மாறி பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் அவர்கள் சிறுமியின் ஆடைகளை எடுத்துக் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் நிர்வாணமாக காட்டில் இருந்து வெளியே வருவதைக் காட்டும் வீடியோ நேற்று வெளியானது. கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் தூரம் சிறுமி நிர்வாணமாக நடந்தே வீட்டை அடைந்துள்ளார். வழியில் சிறுமி நிர்வாணமாக நடந்து சென்றபோது மக்கள் வெறுமனே வேடிக்கை பார்த்ததாகவும், சிலர் அவர் மீது கற்களை வீசியதாகவும் கூறப்படுகிறது.

வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை வீட்டில் உள்ள மூத்த சகோதரியிடம் முதலில் கூறியதாக தெரிகிறது. எனினும் ஆறு நாட்களுக்குப் பிறகு, சிறுமிகள் தங்கள் மாமா ராம் அவதாரிடம் சம்பவம் குறித்து கூறியதை அடுத்து தான், அவர் போலீசை அணுகி புகார் அளித்துள்ளார். 

செப்டம்பர் 7ஆம் தேதி இருவரையும் போஜ்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ராம் அவதார் எஃப்ஐஆர் பதிவு செய்தார். பின்னர் இந்த குற்றத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் நிதின், கபில், அஜய், இம்ரான் மற்றும் நௌஷே அலி என அடையாளம் காணப்பட்டது.

இது மிகக்கொடூரமான குற்றமாக இருந்த நிலையிலும், கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக காவல்துறை செயலற்ற நிலையில் இருப்பதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். போலீசார் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், மருத்துவ பரிசோதனையில் பலாத்காரம் உறுதி செய்யப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

“இந்த சம்பவம் சுமார் பதினைந்து நாட்களுக்கு முன்பு நடந்தது. பெண்ணின் மருத்துவ பரிசோதனையில் கற்பழிப்பு உறுதி செய்யப்படவில்லை, இருப்பினும், நௌஷே அலி என்ற குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது.” என்று மொராதாபாத் வரம்பின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டிஐஜி) ஷலப் மாத்தூர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், தங்கள் மகளை மனநலம் குன்றியவள் என்று கூறுவதாகவும், மாஜிஸ்திரேட் முன் நடந்த விசாரணையில் பாலியல் பலாத்கார சம்பவத்தை மறுத்ததாகவும் டிஐஜி மேலும் கூறினார்.

எஇந்த கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் விஷயத்தை வெளியே கூறினால் கொன்று விடுவோம் என மிரட்டியதாகவும் கூறப்படும் நிலையில், மொரதாபாத் போலீசார் இந்த விவகாரத்தில் சரியாக விசாரணை நடத்தவில்லை என பொதுமக்கள் கூட்டம் சாட்டுகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்