Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,188.62
-300.37sensex(-0.41%)
நிஃப்டி21,888.80
-107.05sensex(-0.49%)
USD
81.57
Exclusive

கழிவறையில் தற்கொலை... ஆசிரியர்களே காரணம் - பெற்றோர் குற்றச்சாட்டு

UDHAYA KUMAR September 21, 2022 & 09:46 [IST]
கழிவறையில் தற்கொலை... ஆசிரியர்களே காரணம் - பெற்றோர் குற்றச்சாட்டுRepresentative Image.

தூத்துக்குடி மாவட்டத்தில், மகளின் உயிரிழப்புக்கு ஆசிரியர்களே காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை பகுதியில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவி படித்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்த அவர், நேற்று இரவு பள்ளி கழிவறையில்  தூக்குப் போட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனைப் பார்த்த மாணவிகள் பள்ளி நிர்வாகத்துக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். 

காவல் துறை விசாரணையில், மாணவி ஒருவாரம் முன்னதாக ஊருக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்ததாகவும், அதிலிருந்து அவரது நடவடிக்கையில் சற்று சந்தேகம் இருந்ததாகவும், சரியாக யாரிடமும் பேசாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், மரணமடைந்த பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் மாணவியின் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதுகுறித்து பேசியவர்கள், இதற்கு ஆசிரியர்களே காரணம் அவர்களே பொறுப்பு என குற்றம் சாட்டியுள்ளனர்.  பள்ளி வகுப்பு ஆசிரியர் தொடர்ந்து திட்டிக் கொண்டிருப்பதாக மகள் தெரிவித்திருந்த நிலையில், தாங்கள் கடைசி வருடம் இதுதான், கொஞ்சம் பொறுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டதாகவும் கூறியுள்ளனர். ஆனால் இப்போது அவர் உயிரையே விட்டுவிட்டார். இதற்கு காரணம் நிச்சயம் பள்ளிதான் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் தற்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்