Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

200 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. குஜராத்தில் கடத்தல் முயற்சி முறியடிப்பு!!

Sekar September 14, 2022 & 15:37 [IST]
200 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. குஜராத்தில் கடத்தல் முயற்சி முறியடிப்பு!!Representative Image.

குஜராத் கடற்பகுதியில் ரூ.200 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களுடன் இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்த ஆறு பாகிஸ்தானியர்களை குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படை இன்று கைது செய்தது. இந்திய கடலோர காவல்படை மற்றும் குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படை இணைந்து இந்த ஆபரேஷனை மேற்கொண்டுள்ளது.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜகாவ் துறைமுகத்திற்கு அருகே கடலோர காவல்படை மற்றும் ஏடிஎஸ் கூட்டுக் குழுவினரால் போதைப்பொருள் ஏற்றி வந்த மீன்பிடி படகை நடுக்கடலில் தடுத்து நிறுத்தபட்டது. 

இது தொடர்பாக பேசிய ஒரு அதிகாரி, “ஹெராயின் குஜராத் கடற்கரையில் இறக்கப்பட்ட பிறகு சாலை வழியாக பஞ்சாப்க்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஒரு குறிப்பிட்ட ரகசிய தகவலின் அடிப்படையில், நாங்கள் பாகிஸ்தானில் இருந்து புறப்பட்ட படகை இடைமறித்து, 40 கிலோ ஹெராயினுடன் ஆறு பாகிஸ்தானியர்களைப் பிடித்தோம்.” என்று கூறினார்.

கைப்பற்றப்பட்ட படகுடன் ஏடிஎஸ் மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் ஜகாவ் கடற்கரையை இன்று மாலை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில ஏ.டி.எஸ் மற்றும் கடலோர காவல்படை கடந்த காலங்களில் இதேபோன்ற போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளை முறியடித்தது மற்றும் குஜராத் கடற்கரை வழியாக இந்தியாவிற்கு கடத்த திட்டமிட்டிருந்த பெரிய அளவிலான போதைப்பொருட்களுடன் வெளிநாட்டினரைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்