Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஹரியானா.. ஜார்க்கண்ட்.. குஜராத்.. அடுத்தடுத்து.. பகீர் கிளப்பிய சம்பவங்கள்!!

Sekar July 20, 2022 & 17:53 [IST]
ஹரியானா.. ஜார்க்கண்ட்.. குஜராத்.. அடுத்தடுத்து.. பகீர் கிளப்பிய சம்பவங்கள்!!Representative Image.

கடந்த 24 மணி நேரத்தில் மூன்றாவது சம்பவமாக, குஜராத் ஆனந்த் மாவட்டத்தில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளை லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்கிரண் எனும் போலீஸ் கான்ஸ்டபிள் நேற்று இரவு ரோந்து பணியில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

தகவல்களின்படி, ராஜ்கிரண் லாரியை நிறுத்த முயன்றபோது, ​​​லாரி டிரைவர் போலீஸ்காரர் மீது வண்டியை ஏற்றிவிட்டு, பின்னர் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ராஜ்கிரண் உடனடியாக கரம்சாத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீஸ்காரர் இறந்ததை ஆனந்த் எஸ்பி அஜித் ராஜ்ஜியன் உறுதி செய்தார்.

முன்னதாக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வாகன சோதனையின் போது பெண் போலீஸ்காரர் உடல் நசுங்கி பலியானார்.

அதற்கு முன்பாக ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில், சட்டவிரோத மைனிங் மாபியா குறித்து விசாரணை நடத்தி வரும் துணை போலீஸ் சூப்பிரண்டு லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 24 மணி நேரத்தில் வாகன சோதனைகளில் 3 போலீசார் கொல்லப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்