விழுப்புரம் அருகே கல்லூரி மாணவன் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார், எனவே குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் டி.யடையார் கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவரது மகன் அருண் (21) இவர் விழுப்புரம் அறிஞர் அண்ணா காலை கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். இவருடைய இருசக்கர வாகனத்தை அதே பகுதியை சேர்ந்த சரத் (20) கீர்த்தி (18) சத்யன் (17) வீரமணி (18) ஆகியோர் திருடியுள்ளனர்.
இவர்கள் இருசக்கர வாகனம் திருடுவது மட்டுமில்லாமல் கஞ்சா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில் அருண் இவர்கள் நால்வரையும் பிடித்து அவர்களிடம் இருசக்கர வாகனம் திருட்டு தொடர்பாக செல்போனில் வாக்குமூலம் பதிவு செய்துள்ளார். பின்னர் இருசக்கர வாகனத்தை தரவில்லை என்றால் போலீசிடம் புகார் அளிப்பேன் என கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நால்வரும் வாகனத்தை திருப்பி தந்துவிடுவதாக கூறி அருணை தனியாக அழைத்துச்சென்று அடித்துக்கொலை செய்துவிட்டு அருகில் உள்ள பனப்பாக்கம் ஏரியில் வீசி சென்றுள்ளனர். இதனையடுத்து கிராமத்திற்குள் வந்த சத்யன் போதையில் இதுகுறித்து உளறியுள்ளார், கிராம மக்கள் அனைவரும் இணைந்து அவனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர் போலீசார் அருணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கிராமமக்கள் அனைவரும் இணைந்து கொலையாளிகள் அனைவரையும் கைது செய்யவேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர், இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனைவரும் கலைந்துசென்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…