கடந்த திங்கட்கிழமை ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள IFFCO சவுக் என்ற பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு சூட்கேஸ் இருந்துள்ளது, தகவலறிந்து வந்த போலீசார் அதை திறந்து பார்த்த போது கொலை செய்யப்பட்ட பெண் நிர்வாணமாக இருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே விசாரணையை ஆரம்பித்த காவல்துறையினர் சிசிடிவி பதிவுகளை பார்த்து, ஆட்டோ ஒருவர் வைத்து விட்டு சென்றதை கண்டுபிடித்தனர்.
பின்னர் ஆட்டோ ஓட்டுநரை விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அந்த ஆட்டோவில் வந்து சூட்கேஸை வைத்துவிட்டு சென்றவர் சிர்ஹவுல் என்ற கிராமத்தை சேர்ந்த ராகுல் என்பவர். அவரை பிடித்து விசாரித்த போது தான் தெரிய வந்தது, அந்த சூட்கேஸில் கொலை செய்யப்பட்டு இருந்தது அவரின் மனைவி பிரியங்கா என்று தெரியவந்தது. 22 வயதான ராகுல் என்பவர் தனியார் நிறுவனத்தில் உதவியாளராக வேலை செய்துவந்துள்ளார். இவருக்கு 20 வயதான பிரியங்கா என்னும் மனைவியும், ஒரு வயதில் குழந்தையும் உள்ளது.
அவர் வாங்கும் சம்பளம் வீட்டு அத்தியாவசிய தேவைக்கே செலவாகியுள்ளது. இருப்பினும் மனைவி போன், டிவி போன்ற ஆண்டம்பர பொருட்களை கேட்டு அவருடன் அதிகவாட்டி சண்டைப் போட்டுள்ளார். சில நேரங்களில் ராகுலை கன்னத்தில் அறைந்துள்ளாராம். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி சண்டை முற்றி போய் இருவரும் அடிதடிக்கு ஆளாகியுள்ளனர். ஆத்திரத்தில் ராகுல் தன்னுடைய மனைவி பிரியங்காவை அடித்தே கொலை செய்துள்ளார். அன்று இரவு முழுக்க தன்னுடைய குழந்தையுடன் மனையின் பிணத்தோடு பொழுதை கழித்துள்ளார். அடுத்த நாள் காலை கடைக்கு சென்று ஒரு பெரிய சூட்கேஸ் வாங்கி அதில் மனைவியின் உடலை களைத்து நிர்வாணமாக சூட்கேஸில் அடைத்துள்ளார்.
பின்பு மனைவியின் கையில் ராகுல் என்று தன்னுடைய பெயரை பச்சை குத்தியதை, கத்தி வைத்து சதையை கிழித்து எடுத்துள்ளார். பின்னர் ஆட்டோ ஒன்றை பிடித்து, யாருக்கும் தெரியாமல் வைத்துவிட்டு தப்பித்ததாக போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டார். பின்னர் இவருக்கு தண்டனை வழங்கி சிறையில் அடைக்கப்பட்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…