Latest News : கர்நாடக மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் காரணமாக காவிரியில் கரைபுரண்டு வெள்ளம் காட்சியின் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் காவிரியில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கர்நாடக அணையிலிருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் தமிழகம் நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், காவிரி கரையோரம் உள்ள தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…