கோவையில் வரும் 26ம் தேதி முதல் இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்திருக்கும் நபர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இருசக்கர வாகன விபத்துகளில் உயிரிழப்பவர்கள் குறித்து விரிவாக கோவை மாநகர போலீசார் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். அதில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஆகியோர் விபத்துகளில் உயிரிழக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது. எனவே, 100% விபத்துகளை தடுக்கும் பொருட்டு பாதுகாப்பான சாலை பயணத்தை உறுதி செய்யும் நோக்குடன் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும் நபர்கள் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறையை செயல்படுத்த கோவை மாநகர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, வரும் 26 ஆம் தேதி முதல் அனைத்து இடங்களிலும் வாகன சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அதில் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தின் பின்னால் அமர்ந்து வரும் நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தலைக்கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு, ஒரு வார காலத்திற்கு போக்குவரத்து பூங்காவில் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் பின்னால் அமர்ந்திருக்கும் நபர்களும் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோவை மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…