Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாணவர்களிடம் ஒரினச்சேர்க்கை டார்ச்சர்; ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!

KANIMOZHI Updated:
மாணவர்களிடம் ஒரினச்சேர்க்கை டார்ச்சர்; ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது! Representative Image.

மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட ஆசிரியரை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர் 

 

மயிலாடுதுறை சேந்தங்குடியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி என்பவரது மகன் சீனிவாசன், இவர் மயிலாடுதுறை நகரில் தனியார் பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கூடுதல் பொறுப்பாக  ஆசியர் மாணவர்கள் விடுதியையும் கண்காணித்து வந்துள்ளார். திருமணமாகாத இவர், அதே பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவன் ஒருவரிடம் தகாத முறையில் ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியுள்ளார். 

 

பயத்தின் காரணமாக இதனை வெளியில் சொல்ல முடியாத சிறுவன், அதே பள்ளியில்  6-ஆம் வகுப்பு படிக்கும் தனது தம்பியிடம் மட்டும் இதுபற்றி கூறியுள்ளார். அந்த சிறுவன் உடனே தனது அண்ணனிடம் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டது குறித்து தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  

 

இதனிடையே, மாணவனிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் சீனிவாசனை பணியில் இருந்து பள்ளி நிர்வாகம் நீக்கியது. விஷயம் வெளியே தெரிந்ததை அறிந்த ஆசிரியர் சீனிவாசன் எலிபேஸ்ட் விஷத்தைத் தின்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதன்காரணமாக, மயங்கி விழுந்த சீனிவாசனை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக சிதம்பரத்தில்  உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 


பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ஆசிரியர் சீனிவாசன் குணமடைந்து  இன்று மயிலாடுதுறை பேருந்து நிலையம் வந்தவரை  மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். 

 

ஆசிரியர் 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தது தெரிய வந்தது. ஆசிரியருக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உடல்நிலை  பரிசோதனை செய்த போலீசார் நாகை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் மாணவர்கள் பெற்றோர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்