ஆந்திராவில் தனது மகள் வேற்று ஜாதியை சேர்ந்த இளைஞரை காதலிப்பதால் கழுத்து நெறித்து கொலை செய்து தற்கொலையாக சித்தரித்தது, நான்கு மாதங்களுக்குப் பிறகு தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சந்திரகிரியை சேர்ந்த முனிராஜா என்பவரது 19 வயது மகளான மோகனகிருஷ்ணா, சிறு வயதிலேயே தாயை இழந்த காரணத்தால் ரெட்டிவாரிப்பள்ளியில் உள்ள தாய் மாமாவிடம் வளர்ந்து வந்துள்ளார். தொலைதூர கல்வி மூலமாக 12ம் வகுப்பு படித்து வந்த மோகன கிருஷ்ணா, நாகயகரிப்பள்ளியை சேர்ந்த இளைஞரைக் காதலித்து வந்துள்ளார்.
மோகனகிருஷ்ணா காதலித்த நபர், வேற்றுச் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் மோகன கிருஷ்ணா தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார். எனவே “எங்கே மகள் தன் பேச்சை மீறி வேறு சாதி ஆணை திருமணம் செய்து கொள்வாளோ?” என அஞ்சிய அவரது தந்தை கடந்த ஜூலை மாதம் 7ம் தேதி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
அத்துடன் தீராத வயிற்று வலியால் துடிதுடித்த தனது மகள் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். இதனிடையே மோகனகிருஷ்ணாவின் உடற்கூராய்வு முடிவில், கழுத்தை இறுக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், தந்தையே தனது மகள் வேற்று ஜாதியை சேர்ந்த இளைஞரை காதலித்ததால் கொலை செய்து தற்கொலையாக சித்தரித்த அம்பலமாகியுள்ளது. சாதிக்காக பெற்ற மகளையே தந்தை ஆணவ கொலை செய்த சம்பவம் ஆந்திர மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…