Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முத்தம் கொடுக்காதே என கூறிய மனைவியை குத்திக்கொன்ற கணவன்...!

madhankumar June 29, 2022 & 19:45 [IST]
முத்தம் கொடுக்காதே என கூறிய மனைவியை குத்திக்கொன்ற கணவன்...!Representative Image.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அவினாஷ், இவருக்கும் கோவையை சேர்ந்த தீபிகா என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு ஆன் குழந்தை உள்ளது. பெங்களூருவில் வேலை பார்த்து வந்த அவினாஷ், இரண்டு மாதங்களுக்கு முன் ஊர் திரும்பினார். அவினாஷ் பெங்களூரில் உள்ள விமானப்படைக்கான  சில பணிகள் ஒப்பந்த அடிப்படையில்  செய்து வரும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

தற்போது வீட்டில் இருந்தே அவினாஷ் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தினமும் காலையில் எழுந்த உடன் தனது குழந்தைக்கு முத்தம் கொடுக்கும் பழக்கத்தை கொண்டுள்ளார் அவினாஷ். இதனை பார்த்த தீபிகா பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுக்காதீர்கள் இதனால் குழந்தைக்கு நோய் தோற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார். 

இந்நிலையில் வழக்கம் போல காலையில் அவினாஷ் தனது மகனுக்கு முத்தம் கொடுத்துள்ளார், இதனை பார்த்த தீபிகா கண்டித்துள்ளார், இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அப்போது ஆத்திரமடைந்த அவினாஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தீபிகாவை குத்தியுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீபிகாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், அனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அவினாஷை தப்பித்து ஓடாதவண்ணம் மடக்கி பிடித்து அவரது உறவினர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுக்காதீர்கள் என கூறிய மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன் இந்த செயலால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்