Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நண்பன் கொலை.. ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய வீரர் மீது பகீர் குற்றச்சாட்டு!!

Sekar June 29, 2022 & 12:47 [IST]
நண்பன் கொலை.. ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய வீரர் மீது பகீர் குற்றச்சாட்டு!!Representative Image.

இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது பால்ய கால நண்பரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றிருந்த பிரேந்திர லக்ரா மீது இறந்தவரின் தந்தை குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனந்த் டோப்போ எனும் இளைஞர் கடந்த பிப்ரவரி 2022இல் புவனேஸ்வரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 

இந்நிலையில் ஆனந்த் டோப்போவின் தந்தையும் முன்னாள் டிஎஸ்பியுமான பந்தன், ஒடிஷா காவல்துறை ஹாக்கி வீரரைக் காப்பாற்ற முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த நான்கு மாதங்களாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய போராடி வருவதாகவும், ஆனால் மாநில காவல்துறை அவருக்கு உதவவில்லை என்றும், இதனால் தனது குற்றச்சாட்டுகளை பகிரங்கப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு வந்ததாகவும் கூறினார்.

32 வயதான லக்ரா, டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் ஒரு அங்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆசிய கோப்பையில் வெண்கலம் வென்ற இந்திய அணியை கேப்டனாக அவர் வழிநடாத்தியும் உள்ளார்.

"நாங்களும் பீரேந்திராவும் பக்கத்து வீட்டுக்காரர்கள், அதனால் இயற்கையாகவே ஆனந்த் அவரது பால்ய நண்பர். பிப்ரவரி 28 அன்று, ஆனந்த் சுயநினைவின்றி இருப்பதாகவும், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகவும் பிரேந்திராவிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. பின்னர் ஆனந்த் இறந்துவிட்டதாக எங்களுக்குத் தெரிவித்தார்." என பந்தன் டோப்போ தெரிவித்தார்.

"என்ன நடந்தது என்று நாங்கள் அவரிடம் கேட்டோம், ஆனால் அவர் எங்களை புவனேஸ்வருக்கு வரச் சொன்னார். அடுத்த நாள் நாங்கள் அங்கு சென்றோம், நாங்கள் உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம், அங்கு அதிகாரி ஆனந்த் தற்கொலை செய்து கொண்டதாக எங்களிடம் கூறினார். ஆனால் தற்கொலைக் குறிப்பு எதுவும் இல்லை. 

நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகு ஆனந்தின் உடல் எங்களிடம் காட்டப்பட்டது, முதல் பார்வையில் அவரது கழுத்தில் கை வைத்து நெறிக்கப்பட்டது போன்ற அடையாளங்களைக் கண்டேன். ஆனால் போஸ்ட் மார்ட்டம் அறிக்கை அது தற்கொலை என்று கூறியது" என்று பந்தன் கூறினார்.

சமீபத்திய வரலாற்றில், கொலைக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது விளையாட்டு வீரர் லக்ரா ஆவார். முன்னதாக ஜூனியர் தேசிய சாம்பியனான சக மல்யுத்த வீரர் சாகர் தங்கரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் நட்சத்திர மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஏற்கனவே திகார் சிறையில் உள்ளார்.

லக்ராவுக்குச் சொந்தமான பாட்டியா, இன்ஃபோசிட்டியில் உள்ள ஆயுஷ் ரேடியத்தின் பிளாட் எண் 401 இல் ஆனந்த் 10 மணியளவில் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த குடியிருப்பில் பிரேந்திர லக்ராவும் மஞ்சீத் டெட் என்ற பெண்ணும் மட்டுமே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அவரது தந்தை தனது மகன் கொலை செய்யப்பட்டபோது அந்த குடியிருப்பில் நான்கு பேர் இருந்தனர் என்றும் மூன்றாவது நபரும் அங்கு இருந்தார், அவர் இப்போது பாதுகாக்கப்படுகிறார் என்றும் அவர் கூறினார்.

"நான் உள்ளூர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்ய முயற்சித்தேன், ஆனால் அவர்கள் தற்கொலை என்று கூறுகின்றனர். சில நாட்களுக்குப் பிறகு நான் டிசிபி அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்தேன், ஆனால் நான்கு மாதங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நாங்கள் இறுதியாக ஊடகங்களுக்கு செல்ல முடிவு செய்தோம்." என்று தந்தை கூறினார்.

"எனக்கு என் மகனுக்கு நீதி வேண்டும். லக்ராவைக் காப்பாற்ற அவர்கள் முயற்சிப்பதால் ஒடிசா காவல்துறை மீது எனக்கு நம்பிக்கை இல்லை, ஏனெனில் அவர் ஒரு பெரிய மனிதர் மற்றும் அவர்களில் ஒருவர். என் மகனின் மர்ம மரணம் குறித்து சுதந்திரமான விசாரணை வேண்டும்." என்று மேலும் கூறினார்.

ஆதாரங்களின்படி, டிஃபெண்டராக விளையாடும் லக்ரா மற்றும் ஆனந்த் இருவரும் திருமணமானவர்கள் என்றாலும், இந்த சம்பவம் ஒரு முக்கோணக் காதலால் ஏற்பட்டது எனவும் ஒருபக்கம் கூறப்படுகிறது.

"திருமணமாகி 12 நாட்களிலேயே ஆனந்த் இறந்தார். பிப்ரவரி 16-ம் தேதி திருமணம் செய்து 28-ம் தேதி இறந்தார். அவர் திருமணத்தில் மகிழ்ச்சியாக இருந்தார்" என்று பந்தன் கூறினார்.

மஞ்சீத்துடன் ஆனந்துக்கு தொடர்பு இருக்கிறதா என்று கேட்டதற்கு, பந்தன் தெளிவான பதிலைச் சொல்லவில்லை.

"எனக்கு அப்படி எதுவும் தெரியாது. ஆனால் அவர்கள் புவனேஸ்வரில் ஒன்றாகப் படித்துக் கொண்டிருந்தார்கள். அதன் பிறகு ஏதாவது நடந்ததா என்று எனக்குத் தெரியாது. ஆனந்த் அவரைப் பற்றி எங்களிடம் எதுவும் சொல்லவில்லை." என்று அவர் கூறினார்.

லக்ரா தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய முகாமில் முன்னாள் இந்திய கேப்டன் சர்தார் சிங்கின் கீழ் பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் தற்போதைய சர்ச்சையை அடுத்து அவர் தேசிய முகாமை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்படலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்