Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வேங்கைவயல் விவகாரத்தை விசாரிக்க முடியவில்லை என்றால் விலகிக் கொள்ளுங்கள்..! - ஐ.ஆர்.எஸ் அதிகாரி பாலமுருகன் பேட்டி

Chandrasekar Updated:
வேங்கைவயல் விவகாரத்தை விசாரிக்க முடியவில்லை என்றால் விலகிக் கொள்ளுங்கள்..! - ஐ.ஆர்.எஸ் அதிகாரி பாலமுருகன் பேட்டி Representative Image.

சிபிசிஐடி விசாரணை பெயரளவில் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக சித்தரிக்கும் வகையில் காவல் துறை செயல்படுகிறது என்று  ஜி.எஸ்.டி அலுவலகத்தில் துணை ஆணையராக பணியாற்றி வரும் பாலமுருகன் குற்றச்சாட்டியுள்ளார்.

வேங்கை வயல் விவகாரம் குறித்தும் உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதியரசர் சத்திய நாராயணன் தலைமையிலான தனிநபர் ஆணையம் குறித்தும் சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள செய்தியாளர் மன்றத்தில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜி.எஸ்.டி அலுவலகத்தில் ஜி.எஸ்.டி துணையராக  பணிபுரிந்து வரும் ஐ.ஆர்.எஸ் அதிகாரி பாலமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக முன்னாள் நீதியரசர் சத்ய நாராயணன் தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையம் அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதி அரசர் சத்யநாராயணன் தனி நபர் ஆணையம் இதுவரையில் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிட மக்களிடம் விசாரணை எதையும் நடத்தவில்லை, ஆணையத்தின் விலாசமோ தொலைபேசி எண்ணோ பொது மக்களுக்கு இதுவரை தெரியப்படுத்தப்படவில்லை.

நீதியரசர் சத்ய நாராயணன் சிபிசிஐடி விசாரணை சரியான முறையில் செல்வதாகவும் சிபிஐ விசாரணை தற்போது தேவை இல்லை என்று கூறியது கண்டிக்கத்தக்கது. தன்னால் விசாரணை மேற்கொள்ள முடியவில்லை என்றால் ஆணையத்திலிருந்து சத்ய நாராயணன் விலகிக் கொள்ள வேண்டும். வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் வேங்கை வேல் கிராமத்திற்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தனிநபர் ஆணையத்தை பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை. தனிநபர் ஆணையத்தின் நீதிபதியை அந்த ஊர் மக்கள் சந்திக்க சென்றபோது அவர்களால் சந்திக்க முடியவில்லை.

இதுவரையில் நீதியரசர் சத்திய நாராயணன் தனிநபர் ஆணையம் எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளவில்லை. தன்னால் விசாரணை மேற்கொள்ள முடியவில்லை என்றால் ஆணையத்தில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக காவல்துறை சித்தரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களால் குற்றம் சாட்டப்பட்ட போலீசாரிடம் நீதியரசர் சத்ய நாராயணன் ஏன் ஆலோசிக்க வேண்டும்?. வேங்கை வயல் பகுதியில் சிபிசிஐடி விசாரணை மக்கள் கணக்கெடுக்கும் வகையில் பெயரளவில் மட்டுமே நடைபெறுகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்