Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை.. மும்பையில் பகீர்..

Nandhinipriya Ganeshan Updated:
ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை.. மும்பையில் பகீர்.. Representative Image.

மராட்டிய மாநிலம் மும்பை நகரில் உள்ள பொவாய் என்ற பகுதியில் அமைந்துள்ளது மும்பை ஐ.ஐ.டி கல்வி நிறுவனம். இதில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆமதாபாத் நகரை சேர்ந்த தர்சன் சொலாங்கி என்ற மாணவர் பி.டெக் இயந்திரவியல் பிரிவில் முதலாம் ஆண்டில் சேர்ந்து உள்ளார். இவருக்கு வயது 18. அவர் அதே கல்வி நிறுவனத்தின் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில், 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை.. மும்பையில் பகீர்.. Representative Image

இந்த தற்கொலை சம்பவத்தை அந்த வழியே சென்ற விடுதி பாதுகாவலர்கள் பார்த்து, உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, ஐ.ஐ.டி வளாகத்தில் பரபரப்பு சூழல் நிலவியது. தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த தற்கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும் என்று மாணவன் தங்கியிருந்த விடுதி அறையை முழுவதுமாக சோதனையிட்டனர். ஆனால், அறையில் தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, போலீசார் தற்செயலான மரணம் என்று வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்