கள்ளகுறிச்சி மாவட்டம் புக்கிரவாரி புத்தூர் என்ற கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஒரு நகைக்கடை திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று நகை கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 281 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் நடந்த நகை கடையில் உள்ள சிசிடிவி கேமராக்களின் வயர்களையும் துண்டித்து உள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கள்ளகுறிச்சியில் நகைக்கடை திறந்த இரண்டே நாட்களில் திருடர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…