சத்தியமங்கலம் அடுத்த கேர்மாளம் அருகே கர்நாடகாவில் இருந்து சட்டவிரோதமாக ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை கடத்தி வந்த நபரை மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கேர்மாளம் சோதனைச் சாவடி வழியாக கர்நாடகாவில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் கேர்மாளம் சோதனை சாவடி அருகே மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மற்றும் ஆசனூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடகாவில் இருந்து வந்த தமிழக பேருந்தை நிறுத்தி சோதனை செய்தபோது சந்தேகப்படும்படி பேருந்தில் அமர்ந்து இருந்த நபர் ஒருவர் எடுத்து வந்த சாக்கு முட்டையை சோதனை செய்தபோது அந்த மூட்டைக்குள் ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் குட்கா பொருட்களை கடத்தி வந்த நபர் சத்தியமங்கலம் அருகே உள்ள ராஜன்நகர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பதும் இவர் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாபுதூர் பகுதியில் பெட்டி கடை நடத்தி வருவதாகவும் கடையில் விற்பனை செய்வதற்காக கர்நாடகாவில் இருந்து ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்கள் வாங்கி வந்ததும் தெரியவந்தது.
உடனடியாக அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த சுமார் 10 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…