Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

காதலிக்கும்போது கொடுத்த பரிசுப்பொருட்களை திருப்பிக்கேட்ட காதலன்.. புது காதலனுடன் இணைந்து கூலிப்படையை ஏவிய காதலி.. 

Nandhinipriya Ganeshan [IST]
காதலிக்கும்போது கொடுத்த பரிசுப்பொருட்களை திருப்பிக்கேட்ட காதலன்.. புது காதலனுடன் இணைந்து கூலிப்படையை ஏவிய காதலி.. Representative Image.

கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி அருகே உள்ள மாத்தார் பகுதியைச் சேர்ந்தவர் ப்ரவின். டிப்ளமோ முடித்துவிட்டு தற்போது வெல்டராக பணியாற்றி வந்த இவருக்கும், அனக்கரை பகுதியை சேர்ந்த ஜெஸ்லின் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவே நாளடைவில் காதலாக மலர்ந்த நிலையில், ஜெஸ்லின் தனது வீட்டிற்கு வந்து பெண் கேட்கும் படி ப்ரவினிடம் கூறியுள்ளார்.

இதனால், ப்ரவினும் தன்னுடைய பெற்றோருடன் சென்று ஜெஸ்லின் வீட்டில் பெண் கேட்டுள்ளார். இதில் இரு வீட்டாரும் சம்மதித்த நிலையில், 2 வருடத்திற்கு பின் திருமணம் செய்து வைக்கலாம் என்று ஜெஸ்லின் வீட்டார் தெரிவிக்கவே, இருவரும் அவ்வப்போது தனியாக கணவன் மனைவி போல சுற்றி திரிந்து வந்துள்ளனர். இதில் இருவருக்கும் இடையே காதல் அதிகரித்துள்ளது. 

இதனிடையில், ஜெஸ்லின் கடந்த ஒருமாதமாக ப்ரவினுடனான தொடர்பை மெல்ல மெல்ல விலக்கிக்கொள்ள, சந்தேகமடைந்த ப்ரவின் அவரை கண்காணிக்க தொடங்கியுள்ளார். அப்போது ஜெஸ்லின் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த டிரைவர் ஜெனித் என்பவருடன் தொடர்பில் இருப்பதையும் அவருடன் பைக்கில் சுற்றி திரிவதையும் பார்த்து கண்டித்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த ஜெஸ்லின் ப்ரவினிடம் தான் இப்போது ஜெனிதை காதலிப்பதாகவும், அவரை தான் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த ப்ரவின் அவரிடம் கொடுத்த பரிசு பொருட்களை திரும்ப கேட்கவே, அதை கொடுப்பதாக கூறி நேற்று வேர்கிளம்பி பகுதிக்கு வருமாறு கூறியுள்ளார்.

இதை நம்பி பிரவினும் தனது இருசக்கர வாகனத்தில் வர, அவரை ஜெனித்துடன் வந்த ஜெஸ்லின் ப்ரவினை பின்தொடர்ந்து வந்துள்ளார். பின்னர், ஏற்கனவே திட்டமிட்டபடி எதிரே 2 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் ப்ரவினின் வாகனத்தை மோதி கீழே தள்ளி சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளனர். இதை ஜெஸ்லின் புதிய காதலனுடன் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அங்கு திரண்ட மக்கள் ப்ரவினை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த தாக்குதல் குறித்து ப்ரவின் சிசிடிவி ஆதாரங்களுடன் கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகாரளிக்கவே காதலி ஜெஸ்லின், ஜெனித் மற்றும் மேலும் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அவர்களை தேடிவருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்