படிப்பில் தன் மகளை முந்தியதால் கோபமடைந்த தாய், தமது மகளின் சக மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த நிலையில், அந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
காரைக்கால் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் பால மணிகண்டன் அருகிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். சம்பவத்தன்று ஆண்டு விழா ஒத்திகையை முடித்து விட்டு வீடு திரும்பிய மாணவனுக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்ததில், மாணவனுடன் படிக்கும் சக மாணவியின் தாய் பாலமணிகண்டனுக்கு குளிர்பானம் தருவது தெரியவந்தது. தன் மகளை விட படிப்பில் கெட்டிக்காரனாக பாலமணிகண்டன் இருந்ததால் பொறாமையில் சகாயராணி விக்டோரியா என்ற பெண் இதில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதற்கிடையே மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளான். இதையடுத்து மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சகாயராணி கைது செய்யப்பட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…