கடலூர் மாவட்டம் புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி கழிவறையில் ஒரு பச்சிளம் குழந்தையில் சடலம் அதிர்ச்சி உண்டாக்கியது, விசாரித்ததில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது, இது பற்றி அறிய மேலும் படிக்கவும்.
பள்ளி கழிவறையில் குழந்தை... நடந்தது என்ன ?
கடலூர், புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கழிப்பறையின் அருகே ஒரு பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. இதைப் பார்த்தவுடன் இந்த செய்தி பள்ளி தலைமை ஆசிரியரிடம் சென்றது.
உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் போலீஸார் இந்த இடத்துக்கு விசாரணை செய்து குழந்தையின் உடலை உடற்கூராய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்கையில் அந்த பள்ளியில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவிக்கு தான் பிறந்தது என்று அறிய வந்தது, இந்த மாணவி இவரின் வீட்டின் அருகே வசிக்கும் ஒருவருக்குமான நெருக்கமான பழக்கத்தால் கர்ப்பம் தரித்ததும் விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும் விசாரணையில், பள்ளி கழிவறையில் 8 மாதத்தில் ஆண் குழந்தை பிறந்ததும் இறந்தே பிறந்த குழந்தை என்ன செய்வது எனத் தெரியாமல் குழந்தையின் சடலத்தை விட்டுவிட்டு வந்ததாகக் கூறியுள்ளார். இறுதியாக இந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாக போலீஸ்தார் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…