Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Latest News in Tamilnadu: தந்தையைத் துண்டு துண்டாக வெட்டி பேரலில் போட்டு புதைத்த மகன்….! கூடவே இருந்து தேடுவது போல நடிப்பு..!

Gowthami Subramani May 21, 2022 & 16:40 [IST]
Latest News in Tamilnadu: தந்தையைத் துண்டு துண்டாக வெட்டி பேரலில் போட்டு புதைத்த மகன்….! கூடவே இருந்து தேடுவது போல நடிப்பு..!Representative Image.

Latest News in Tamilnadu: சொத்துக்காக, தனது தந்தையையே வெட்டிக் கொன்று பேரலில் மூடி வைத்த மகன். பிறகு பேரலோடு மண்ணுக்குள் புதைத்து, சகோதரியின் கூடவே இருந்து தந்தையைத் தேடுவது போல நடித்தது அம்பலம்.

குமரேசன் வீடு

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவருக்கு வயது 80. இவருக்கு, குணசேகரன் என்ற மகனும், காஞ்சனா, பரிமளா, யமுனா என்ற மூன்று மகள்களும் உள்ளனர். குமரேசனின் மனைவி சிறிது நாளுக்கு முன்பு, உடல் நிலை சரியில்லாததால் இறந்து விட்டார். மேலும், இவரது மகளான காஞ்சனாவின் கணவர் இல்லாத நிலையில், தந்தை குமரேசனுடன் வசிந்து வந்தார்.

அதன் படி, வீட்டின் முதல் தளத்தில்  குணசேகரன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்பவர். மேலும், வீட்டின் இரண்டாவது தளத்தில், குமரேசன் மற்றும் காஞ்சனா வந்தி வந்தனர்.

உடலைப் பேரலில் போட்டு புதைப்பு

குணசேகரன் சொத்து பிரிப்பதில் குமரேசனிடம் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார். மகள்களுக்கும் சொத்து பிரித்துத் தருவதாகக் கூறியுள்ளார் குமரேசன். இந்நிலையில், குமரேசனின் மகள் காஞ்சனா கடந்த 15 ஆம் தேதி வெளியில் சென்றுள்ளார். அதன் பிறகு, கடந்த 19 ஆம் தேதி வீட்டிற்கு வந்து பார்த்த போது, முன்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த காஞ்சனா, பூட்டை உடைத்து, உள்ளே சென்று பார்த்த போது, வீடு முழுக்க இரத்த கரையுடன் துர்நாற்றம் வீசியுள்ளது. வீட்டில் குமரேசனும், குணசேகரனும் இல்லை. இதனையடுத்து, குணசேகரன் வீட்டிற்கு வந்த பிறகு, தந்தையைத் தேடும் முயற்சியில் காஞ்சனா மற்றும் குணசேகரன் இருவரும் ஈடுபட்டுள்ளனர்.

போலீசில் புகார்

மேலும், காஞ்சனா உடனே வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில், விசாரித்தலில் அடிக்கடி மகனுக்கும் தந்தைக்கும் இடையே சொத்து சம்பந்தமாக தகராறு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், குணசேகரன் தனது மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்து தலைமறைவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதில், காஞ்சனா வெளியே இருக்கும் நேரத்தில், குமரேசனிடம் குணசேகரம் பணம் கேட்டுள்ளார். பணத்தைத் தர முடியாது என குமரேசன் கூறியிருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த குணசேகரன் தந்தை குமரேசனைக் கூறு கூறாக வெட்டி குமரேசனின் உடலை ஒரு பேரலில் உப்பு போட்டு வைத்திருந்ததும், தனது நண்பரிடம் வேறு விதமான பொய்களைக் கூறி பேரலைப் புதைத்ததும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, போலீஸார், குமரேசனின் மகள் காஞ்சனாவைக் கூட்டிச் சென்று குமரேசனின் உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சொத்துக்காகத் தந்தையைக் கூறு கூறாக வெட்டி, தற்போது தலைமறைவாக இருக்கும் குணசேகரனைப் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வருகிறார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்