இந்தியாவின் 76வது சுதந்திர தின விழா இன்று நாடு கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எடப்பாடி பகுதியில் உள்ள பல்வேறு மதுபான கடைகளில் இன்று அதிகாலை முதல் மறைமுக மது விற்பனை நடைபெற்று வருகின்றன. அதிலும் எடப்பாடி பகுதியில் பூலாம்பட்டி பிரதான சாலையில் அமைந்துள்ள மது கடையில் பாதி கதவு திறந்த நிலையில் தொடர்ந்து மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், சில குடிமகன்கள் சட்டையில் தேசிய கொடியை அணிந்து வந்து மது குடித்து செல்கின்றனர். இதனை காவல்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…