மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஷியாமல் முண்டா என்ற நபர் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று காலை மன அழுத்தம் அதிகமாகி ஆத்திரத்தில் கழிவறையில் தன்னுடைய ஆணுறுப்பை வெட்டி காட்டில் வீசிவிட்டு மயங்கி விழுந்துள்ளார். ஷியாமை ரொம்ப நேரம் வெளியே வராமல் இருப்பதை கண்டு சந்தேகமடைந்த ஷியாமல் முண்டாவின் சகோதரர் நிர்மல் முண்டா கழிவறைக்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது, அங்கு அவர் இரத்த வெல்லத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனே குடும்பத்தினரை கூப்பிட்டு உடனே ஷியாமலை பாங்கான் துணை மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உடல்நிலை மோசமடைந்ததால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனே கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியதை அடுத்து, அங்கு சேர்க்கப்பட்டார். தற்போது உயிருக்கு போராடி சிகிச்சை பெற்று வருகிறார். என்னதான் மன உளைச்சலாக இருந்தாலும், இப்படியா பண்ணுவது..
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…