ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள நார்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் தனது மனைவியை வேறொருவருக்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபரை திருமணம் செய்து கொள்ளுமாறு மனைவியையும் வற்புறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அங்கிருந்து வெளியான அறிக்கைகளின்படி, கீரா பெருக் என்ற நபர் தனது மனைவி பூர்ணிமா போயுடன் தனது வீட்டை விட்டு அக்டோபர் 30 ஆம் தேதி டெல்லியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலைக்குச் சென்றார்.
இருப்பினும், 2 நாட்களுக்குப் பிறகு, கீரா பெருக் பூர்ணிமாவை மற்றொரு நபருக்கு பணத்திற்காக விற்றார். பெரும் தொகையை வாங்கிக் கொண்டு தனது மனைவியை விற்றதோடு, அந்த நபருக்கு திருமணமும் செய்து வைத்தார்.
இந்நிலையில், நவம்பர் 5 ஆம் தேதி பூர்ணிமா தனது தந்தை குலமணி போய்க்கு போன் செய்து நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார்.
இதையடுத்து, பூர்ணிமாவின் தந்தை நர்லா காவல் நிலையத்தில் கீரா மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் நார்லா போலீசார் கீராவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…