Jabalpur Murder: மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இளம் ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்பு கழுத்தறுக்கப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். பெண்ணின் உடலை மீட்டு போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கினர். ஆனால், கொஞ்சம் நேரத்திலேயே இந்த கொலையை செய்த வாலிபரின் வாக்குமூல வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தை சேர்ந்த அபிஜித்திற்கும் மத்தியப்பிரதேசம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த சில்பா என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்த பழக்கம் காதலாக மலர்ந்து, நீண்டநாள் பழகி வந்துள்ளனர். இந்தநிலையில், அபிஜித்தின் பிசினஸ் பார்ட்னர் உடன் சில்பா நெருக்கமாக பழகத்தொடங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல், இருவருடமும் சில்பா ஆசை வார்த்தை பேசி 12 லட்சம் ரூபாய் பணமும் பெற்று மோசடி செய்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த அபிஜித் மற்றும் அவரது பிசினஸ் பார்ட்னர் இருவரும் சில்பாவை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக ஜபல்பூர் வந்த அபிஜித் அங்குள்ள தனியார் விடுதியில் ரூம் எடுத்து தங்கியுள்ளார். பின்னர், சில்பாவையும் அங்கு வரவழைத்து கழுத்தறுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் அபிஜித். இரத்த வெல்லத்தில் துடிக்கும் சில்பாவை வீடியோ எடுத்த அபிஜித், என்னை ஏமாற்றியதற்கான தண்டனை இதுவே என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
பின்னர், இந்த வீடியோவை இன்ஸ்டாவிலும் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலானதையடுத்து அபிஜித்தை 4 சிறப்பு தனிப்படை அமைத்து போலீஸார் தேடிவருகின்றனர். தன்னை ஏமாற்றிய பெண்ணை வரவழைத்து கழுத்தை அறுத்து கொலை செய்து அதை வீடியோ எடுத்து சமூகவலைதளத்திலும் பதிவிட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…