குழந்தை கடத்தல் வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவின் கீழ் தாய் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதனிடையே நரபலி கொடுப்பதற்காக குழந்தையை கடத்தினார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மங்கமாள்புரம் பகுதியைச் சேர்ந்த ஜானகி என்பவரின் பிறந்த 10 நாள் ஆன பெண் குழந்தையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி குழந்தையை கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் குழந்தையின் தாய் ஜானகியை லால்குடி போலீஸார் கைது செய்து கடத்திய குழந்தை எங்கே உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வழக்கறிஞர் பிரபு அவர்களின் இரண்டாவது மனைவி சண்முகவள்ளி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். போலீஸ் விசாரணையில் கடத்தப்பட்ட குழந்தையின் தாய் ஜானகி முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்ததால், கடத்தப்பட்ட குழந்தை 4 மாதங்கள் கடந்தும் மீட்கபடாத நிலையில் குழந்தையின் தாய் ஜானகியை ஐந்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவின் பேரில் மூன்று ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து வழக்கறிஞர் பிரபு அவரது இரண்டாவது மனைவி சண்முகவள்ளியை போலீசார் தேடி வருகின்றனர். இந்தக் கடத்தல் சம்பவத்தில் குழந்தையை விற்பனைக்காக கடத்தியார்களா? அல்லது நரபலி கொடுப்பதற்காக கடத்தினார்களா? என்பது கொடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…