தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் சிறுமியை தொடர்ந்து பலமுறை பலாத்காரம் செய்த சகோதரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் 15 வயது சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக 22 மற்றும் 27 வயதுடைய இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் புதன்கிழமை மாலை வெளிச்சத்துக்கு வந்த நிலையில், குற்றவாளிகள் வியாழக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டனர்.
தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள மில்ஸ் காலனி பகுதியில் 15 வயது சிறுமியை 27 மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள் மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். 9ம் வகுப்பு படித்து வந்த மாணவியை கடந்த ஒரு மாதமாக சகோதரர்கள் இருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.
இதுகுறித்து கடந்த புதன்கிழமை பெற்றோருக்கு தெரிய வந்ததை அடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பாரதிய ஜனதா யு மோர்ச்சா (BJYM) அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது குற்றம் சாட்டப்பட்டவரின் வீடும் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் உடனடியாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை வியாழக்கிழமை பிற்பகலில் கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…