திருவண்ணாமலை மாவட்டத்தில் தாயின் கள்ளக்காதலால் 2 வயது மகன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காங்கரனந்தலைச் சேர்ந்த ஜெயசுதா என்பவர் தனது கணவரை பிரிந்து 2வயது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஜெயசுதாவுக்கு, ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் திருமணமான மாணிக்கம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணிக்கம் தன் குடும்பத்தை பிரிந்து ஜெயசுதாவுடன் சேர்ந்து சேவூரில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.
இவ்வாறு சென்றுகொண்டிருக்கையில், கடந்த மாதம் 21 ஆம் தேதி குடிபோதையில் வீட்டிற்கு வந்த மாணிக்கம், ஜெயசுதாவுடன் சண்டைபோட்டுவிட்டு, அருகில் இருந்த கட்டையால் குழந்தையை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இந்நிலையில், கள்ளக்காதலன் மாணிக்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…