வாணியம்பாடி அருகே வேகமாக வந்த கார் சாலையில் சென்று கொண்டிருந்த 8 ஆம் வகுப்பு மாணவர்கள் மீது மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
வாணியம்பாடி அருகே வளையம்பட்டு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக கார் ஒன்று வந்துள்ளது. அந்த தருணத்தில் சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற மூன்று 8 ஆம் வகுப்பு படிப்பு மாணவர்கள் ரபீக், விஜய், சூர்யா மீது அந்த கார் மோதி விபத்துக்குள்ளாகியது. இதனால் அந்த மூன்று மாணவர்களும் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒன்றும் அறியாத வயதில் சாலையை கடக்க முயலும் போது கோர விபத்தில் சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…