ராமநாதபுரத்தில் ரவுடி ஒருவன் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள செங்கமடை எனும் பகுதியைச் சேர்ந்த பாண்டி எனும் முத்துப்பாண்டி அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ளார். அவர் மேல் 3 கொலை வழக்குகளும், பல்வேறு கொள்ளை தொடர்பான வழக்குகளும் உள்ளன.
இந்நிலையில், நேற்று இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற முத்துப்பாண்டி அதன் பிறகு வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் எங்கு தேடியும் முத்துப்பாண்டி கிடைக்கவில்லை.
இந்நிலையில், செங்கமடை கிராமத்தின் வயல்வெளியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் சடலம் கிடப்பதாக திருவாடனை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே சம்பவ உடத்திற்கு விரைந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், தலை துண்டித்து சடலமாக கிடந்தது ரவுடி முத்துப்பாண்டி என தெரியவந்தது. இந்நிலையில், முத்துப்பாண்டியை கொலை செய்தது யார் என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…