Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இளம் முஸ்லீம் மதத் தலைவர் சுட்டுக்கொலை.. நாசிக்கில் நாசவேலை!!

Sekar July 06, 2022 & 11:43 [IST]
இளம் முஸ்லீம் மதத் தலைவர் சுட்டுக்கொலை.. நாசிக்கில் நாசவேலை!!Representative Image.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் சூஃபி பாபா என்று அழைக்கப்படும் முஸ்லீம் ஆன்மீகத் தலைவரை அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 35 வயதான சூஃபி பாபா எனும் குவாஜா சய்யத் சிஷ்டி, நேற்று நாசிக்கின் யோலா நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

மும்பையில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள யோலா நகரின் எம்ஐடிசி பகுதியில் உள்ள திறந்தவெளியில் இந்த சம்பவம் நேற்று மாலையில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்தியவர்களால் அவர் நெற்றியில் துப்பாக்கியால் சுடப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார் என்று அதிகாரி கூறினார். சூஃபி பாபாவைக் கொன்ற பிறகு, அவர் பயன்படுத்திய எஸ்யுவி வாகனத்தை தாக்கியவர்கள் கைப்பற்றி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

யோலா காவல் நிலையத்தில் இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்