Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரூ.5,000 லஞ்சம் பெற்ற நரிக்குடி காவல் ஆய்வாளர் கைது!

Surya Updated:
ரூ.5,000 லஞ்சம் பெற்ற நரிக்குடி காவல் ஆய்வாளர் கைது!Representative Image.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே, நரிக்குடி காவல் நிலைய ஆய்வாளர் ராம நாராயணன், 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது, கையும் களவுமாக பிடிபட்டார். தாமரைக்குளம் களரி திருவிழாவில் நாடக நிகழ்ச்சி மற்றும் மைக் செட் அமைப்பதற்காக கோயில் நிர்வாகத்தினர் நரிக்குடி காவல் நிலையத்தில் அனுமதி கோரியுள்ளனர். அந்த அனுமதிக்காக, ஆய்வாளர் ராமநாராயணன் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. கோயில் நிர்வாகத்தினரின் தகவலின் பேரில், லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, ரசாயனம் தடவப்பட்ட 5 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்