தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்ட்ராய்டு செல்போன்களில் வாட்ஸ் அப் குரூப் மூலம் வரும் "நியூ பிங்க் வாட்ஸ் அப்" என்ற லிங்கை யாருக்கும் பகிர வேண்டாம் என காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு போன்களை குறிவைத்து, தனிப்பட்ட தகவல்களை திருடும் நோக்கில் ஏராளமான வைரஸ் செயலி (Virus app)கள் பரப்பப்பட்டுவருகிறது. இதன் மூலம் வாடிக்கையாளரின் அனைத்து வகையான தகவல்களையும் எடுக்க முடியும். இதுபோன்ற ஒரு வைரஸ் லிங்க் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பரப்பப்பட்டுவருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களை குறிவைத்து, அவர்களது வாட்ஸ் அப் எண்ணில் "நியூ பிங்க் வாட்ஸ் அப்" என்ற பெயரில் லிங் ஒன்று பரபரப்பட்டுவருகிறது. இது ஒரு வைரஸ் ஆப் எனத் தெரியவந்துள்ளது. இந்த லிங்கை கிளிக் செய்யும் வாடிக்கையாளர்களின் செல்போன் ஹேக் செய்யப்பட்டு, அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் திருடப்படும் ஆபத்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், இதுபோன்று வாட்ஸ் அப்-ல் வரும் "நியூ பிங்க் வாட்ஸ் அப்" என்ற லிங்கைக யாரும் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…