மாற்றுத்திறனாளிகள் 100 நாள் வேலை திட்டத்தில் 4 ம்சாணிநேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாதமாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவமான வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, திறன்சாரா உடல் உழைப்பை மேற்கொள்ள விருப்பம் உடையவயது வந்தோரைக் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என தனித்துவமான சிறப்பே விலைப்புள்ளிபட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாற்றுத்திறனாளிகள் 100 நாள் வேலைத்திட்டத்தில் தினமும் 4 மணி நேரம் வேலை செய்தலே போதும் அவர்களுக்கு முழு ஊதியமும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
பணித் தளத்தில் தொழிலாளர்களுக்கு தண்ணீர் வழங்குதல், குழந்தைகளை பராமரித்தல், மற்றும் சிறு வேலைகளான பணித்தளத்தில் அகற்றப்பட்ட இலை, தழைகள், சிறு மரங்களை அப்புறப்படுத்துதல், கரைகளை சமன்படுத்துதல் போன்ற பணிகள் மட்டுமே செய்ய வரையறுக்கப்பட்டுள்ளது. தமிழகம் கொண்டுவந்துள்ள இத்தகைய செயல்பாட்டை மத்திய அரசானது பாரதியுடன் மற்ற மாநிலங்களையும் இந்த முறையை பின்பற்ற வலியுறுத்தியுள்ளது.
இதில் தகுதியுடைய அணைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு நீல நிற அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதும் மேலும் அவர்களுக்கு 2 கிலோமீட்டருக்கு உள்ளே உன்ன தூரத்தில் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட 15 நாட்களுக்குள் அவர்களது வங்கிக்கணக்கில் அவர்களது ஊதியம் தாமதமின்றி வழங்கப்படுகிறது. மாநில அரசின் வழிகாட்டுதலின் படி இவை நடத்தப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…