Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அடுத்த 4 நாட்களுக்கு மழை எச்சரிக்கை வெளிய போக வேண்டாம் | Rain News Today in Tamil

Priyanka Hochumin Updated:
அடுத்த 4 நாட்களுக்கு மழை எச்சரிக்கை வெளிய போக வேண்டாம் | Rain News Today in TamilRepresentative Image.

தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்போது உலகளவில் பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அதன் விளைவாக இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்துள்ளது. எதனால் பருவநிலையில் திடீர் மாற்றம் மற்றும் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்துள்ளது குறித்து விவரங்களை பார்க்கலாம்.

வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சென்னையில் அண்ணா நகர், கோயம்பேடு பகுதிகளில் மிதமான மழையும், வடசென்னை பகுதிகளில் சுமார் 1/2 மணி நேரத்திற்கு மேல் இடியுடன் கனமழை பெய்ததால் சாலையில் நீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளித்துள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு மழை எச்சரிக்கை வெளிய போக வேண்டாம் | Rain News Today in TamilRepresentative Image

கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் போன்ற செழிப்பான பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேல் மிதமான மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை பெய்துள்ளது.  திருப்பத்தூர், விருதுநகர் மாவட்டங்களில் இடியுடன் மிக கனமழை பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஒரு சில பகுதியில் தூர்வாரப்பட்டதால் மழை நீருடன் கழிவு நீர் சேர்ந்து சாலையை சேதப்படுத்தியுள்ளது.

கடலூர், நெய்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. விழுப்புரம் பேருந்து நிலையம் மற்றும் கானை பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்