இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக தலைமறைவு வாழ்க்கை வரும் நித்தியானந்தா இலங்கையிடம் மருத்துவ உதவிக்காக அடைக்கலம் கேட்டு கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு புகார்களுக்கு ஆளான சாமியார் நித்யானந்தா கைலாசம் என்ற பெயரில் தனி நாடு அமைந்துள்ளதாக அறிவித்து அதில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், இலங்கையிடம் அடைக்கலம் கேட்டு அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு நித்யானந்தா கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மருத்துவ சிகிச்சை பெறஅடைக்கலம் தரும்படி இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் தனக்கு உடல் நலம் சரியில்லை என்றும், அவசரமாக மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் நித்யானந்தா தனது கடிதத்தில் மன்றாடியுள்ளார். அத்தோடு சிகிச்சைக்கான செலவையும் அனைத்து மருந்துகளுக்கான செலவையும் கைலாசாவே ஏற்றுக் கொள்ளும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…