செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சூனாம்பேடு ஆண்டார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முரளி (36). இவர் அப்பகுதியில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புஷ்பா (33) இவர் இரண்டாவதாக கருத்தரித்து இருந்தார். இந்த நிலையில், பிரசவ வலி காரணமாக இல்லிடு அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லாத நிலையில் செவிலியர்கள் மட்டுமே 2 பேர் இருந்துள்ளனர்.
இதனால் செய்வதறியாது தவித்த செவிலியர்கள் நண்பன் படத்தில் வருவது போன்று மருத்துவரின் ஆலோசனையின் படி வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்துள்ளனர். மருத்துவர் சொன்ன ஆலோசனைப்படி, செவிலியர்கள் செய்துள்ளனர் எவ்வளவு முயன்றும் குழந்தையின் தலை மட்டும் வெளியே வரவில்லை.
இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் குழந்தை வரும் வழியிலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்து பிறந்துள்ளது. இதனை அடுத்து மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் மருத்துவரின் அலட்சியப் போக்கால் குழந்தை இறந்து பிறந்ததாக, குழந்தையின் உடலை பெற்றோர் மற்றும் உறவினர் வாங்க மறுத்து விட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், பணிக்கு வராமல் மருத்துவர் வீடியோ கால் மூலம் செவிலியர்களிடம் பேசி பிரசவம் பார்த்ததாக சூனாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…