Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மலை உச்சியில் இருந்து குதித்து மூதாட்டி தற்கொலை..!

Muthu Kumar August 28, 2022 & 20:00 [IST]
மலை உச்சியில் இருந்து குதித்து மூதாட்டி தற்கொலை..!Representative Image.

நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா மலை உச்சியில் இருந்து குதித்து மூதாட்டி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தொட்டபெட்டா காட்சி முனையில் அமைந்துள்ள பள்ளத்தாக்கில் வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்துள்ளனர். அப்போது தடுப்புகளை தாண்டி மலை உச்சிக்கு சென்ற ஒரு மூதாட்டி திடீரென கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து, இந்த சம்பவத்தை அங்கிருந்த சுற்றுலா பயணிகள் சிலர் வீடியோ பதிவு செய்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த உதகை வனத்துறையினர் 350 அடி பள்ளத்தாக்கில் இருந்து அப்பெண்ணை சடலமாக மீட்டனர். 

மேலும், இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் கோவையை சேர்ந்த 63 வயதான மூதாட்டி லீலாவதி தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்