பேய் ஓட்டுவதாகக் கூறி சிறுமி மற்றும் அவரது தம்பியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட பாதிரியாருக்கு கேரள நீதிமன்றம் ஆயுள் தண்டனையும் 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரம் எனும் பகுதியைச் சேர்ந்தவர் பாதிரியார் ஜோஸ் பிரகாஷ் ( வயது 53). இவர் அங்குள்ள ஒரு சர்ச்சில் பாஸ்டராக உள்ளார்.
முன்னதாக, கடந்த 2016 ஆம் ஆண்டு மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணாவில் நடைபெற்ற ஒரு கிறிஸ்தவ கூட்டத்தில் கலந்துகொள்ள பாதிரியார் சென்றிருந்தபோது அங்கு ஒரு குடும்பத்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கும், அவரது 12 வயதான தம்பிக்கும் பேய் பிடித்து இருப்பதாகவும், அதை விரட்டவில்லை என்றால் மிகப்பெரிய பிரச்சினைகளில் குடும்பம் சிக்க நேரிடும் என்று பாதிரியார் பகீர் கிளப்பியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பாதிரியார் ஜோஸ் பிரகாஷை பேய் ஓட்டுவதற்காக வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். பேய் ஓட்டுவதாக கூறி வீட்டினரை வெளியே இருக்க வைத்துவிட்டு சிறுமியையும், சிறுவனையும் பலமுறை பலாத்காரம் செய்து உள்ளார்.
பாதிரியார் பேய் ஓட்டிவிட்டதாக சென்ற நிலையில், சிறுமியும், சிறுவனும் தங்களுக்கு நேர்ந்த துயரத்தை பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே மஞ்சேரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பாதிரியார் ஜோஸ் பிரகாஷை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை மஞ்சேரி அதிவிரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் பாஸ்டர் ஜோஸ் பிரகாஷை அவரது ஆயுள்காலம் முழுவதும் சிறையில் அடைக்கவும், ₹2 லட்சம் அபராதமும் விதித்தும் தீர்ப்பளித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…