காஞ்சிபுரத்தில் அரசுப்பேருந்தின் முன் படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் தொங்கியபடி பயணித்துள்ளனர். இந்நிலையில், அந்த பேருந்தின் ஓட்டுநர் ரமேஷ் என்பவர் மாணவர்களை மேலே எறி வரும் படி கூறியுள்ளார்.
இந்நிலையில், மாணவர்கள் மேலே ஏறி வர மறுத்ததால் பேருந்தை விட்டு கீழே இறங்குமாறு ஓட்டுநர் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள் ஓட்டுநர் ரமேஷ் கண்ணத்தில் அறைந்ததுள்ளனட். மேலும், தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு தப்பியோட முயற்சித்துள்ளனர்.
மேலும், மாணவரை பிடிக்க முயன்ற 40 வயது நபரை தலையில் தாக்கியுள்ளனர். இதனால், அவரது தலையில் ரத்தம் வடிந்துள்ளது.
இதனால், ஆவேசமடைந்த பொதுமக்கள் மாணவர்களை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…